/* */

திருவெறும்பூரில் புதிய குளிர்சாதன பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவெறும்பூரிலிருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய குளிர்சாதன பேருந்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் புதிய குளிர்சாதன பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
X

திருவெறும்பூரில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய ஏசி பஸ் வழித்தடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் திருவெறும்பூர் ஆகும். இதன் அருகே பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பிஎஃப் தொழிற்சாலை, துவாக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி, உணவக மேலாண்மை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்ப கழகம் எனும் என்ஐ டி ஆகியவை உள்ளது.

இந்த பகுதிகளில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. எப்பொழுதும் கூட்ட நெரிசலாகவே பஸ்கள் சென்று வரும்.

தற்பொழுது இங்குள்ள பொதுமக்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு ஒரு ஏசி சொகுசு பேருந்து விட்டால் சிறப்பாக இருக்கும் என்று தொகுதி எம்எல்ஏ வும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று முதல் திருவெறும்பூரில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய ஏசி சொகுசு பஸ்சை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அதோடு அந்த பஸ்சில் ஏறி மத்திய பஸ் நிலையத்தில் பயணம் செய்தார்.

இந்த பஸ் துவாக்குடியில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு 22 கிலோமீட்டர் தொலைவுக்கு நாளொன்றுக்கு 16 முறை சென்று வரும். குறைந்தபட்சம் கட்டணம் 15 ரூபாய் அதிக பட்ச கட்டணம் 40 ரூபாய் ஆகும். அனைத்து பஸ் நிறுத்தத்திலும் நின்று செல்லும்.

விழாவில் தாசில்தார் செல்வகணேஷ், போக்குவரத்து துறையில் உயர் அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ, கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கே.எஸ்.எம். கருணாநிதி, சேர்மன் சத்யா கோவிந்தராஜ், முன்னாள் சேர்மன் மயில் பெரியசாமி, காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 16 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?