/* */

திருச்சி துவாக்குடி ஓம் சக்தி கோயிலில் நகை-பணம் திருடிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் துவாக்குடி ஓம்சக்தி கோயிலில் நகை-பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி துவாக்குடி ஓம் சக்தி கோயிலில் நகை-பணம் திருடிய 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்த ராவுத்தான்மேடு பகுதியில் ஓம்சக்தி கோயில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் புகுந்து அங்குள்ள உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கதாலியையும் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காட்டூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மன்சூர்அலி (வயது 27), உசேன் அலி (வயது32)என்பதும், அவர்கள் தான் கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன் பேரில் அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?