/* */

திருச்சி அருகே பனையபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருச்சி அருகே பனையபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே பனையபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

திருச்சி  அருகே பனையபுரத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதை கலெக்டரின் உதவியாளர் மல்லிகா பார்வையிட்டார்.

திருச்சி திருவாணைக்கோவில் அருகே உள்ள பனையபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனை திருச்சி கலெக்டரின் நேர்முக வேளாண் உதவி அலுவலர் மல்லிகா பார்வையிட்டார்.

இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல் மணிகளை இடைத்தரகர்கள் இல்லாமல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கூடுதல் விலை பெறமுடியும்.

இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு, திருவளர்சோலை, பொண்ணுரங்கபுரம் உள்ளிட்ட கல்லணை நடுகரை பகுதி விவசாயப் பெருமக்கள் பயனடைவார்கள்.

இந்த நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் 15 நாட்கள் முன்கூட்டியே திறந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என விவசாயிகள் கூறுவதுடன் தற்போது திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியே என கூறினார்கள்.

இந்த விழாவில் பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Feb 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  2. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  5. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  6. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  7. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  8. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  9. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  10. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?