Begin typing your search above and press return to search.
திருவெறும்பூரில் இலவச மருத்துவ முகாம் -அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடந்த இலவச மருத்துவ முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பூலாங்கடி காலனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். இதில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும், இலவசமாக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்தார்.