Begin typing your search above and press return to search.
திருச்சியில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சியில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சி காஜாமலை அய்யனார் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 37). சம்பவத்தன்று இவர் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம ஆசாமிகள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.500-ஐ பறித்துக் கொண்டு ஓடினர்.
இது தொடர்பாக முருகன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த பொன்மலை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 23), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சாகுல் மீரான் (வயது 22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.