/* */

மதுவுக்கு அடிமையான மின் வாரிய ஊழியர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

திருச்சி அருகே மதுவுக்கு அடிமையான மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்தார்.அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

HIGHLIGHTS

மதுவுக்கு அடிமையான மின் வாரிய ஊழியர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
X

நவல்பட்டு  போலீஸ் நிலையம் (பைல் படம்)

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அடுத்துள்ள அய்யம்பட்டி வல்லாள கண்டன் அய்யனார் நகரை சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் இளையராஜா.(வயது 32). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விஜிலன்ஸ் பிரிவு உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார்.இவரது தாய், தந்தை, அண்ணன் மூவரும் இறந்து விட்டனர்.

இளையராஜா திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார். தனிமையில் இருந்த இளையராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.இந்நிலையில் திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள உறவினருக்கு வீடியோகால் மூலம் செல்போனில் பேசியுள்ளார்.அதில் எல்லாரிடமும் சகஜமாக பேசாமல் தாழ்வு மனப்பான்மையுடன் நான் இருந்து விட்டேன்.இவ்வளவு நாளாக அது தெரியவில்லை.இப்பொது தெரிந்து கொண்டேன். ஆனாலும் எனக்கு வாழ விருப்பம் இல்லை. பாய், அப்பா, அம்மா, தங்கை என்று குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து தான் விஷம் கலந்த மதுவை குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக அந்த வீடியோ காலில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இளையராஜாவின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இளையராஜாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.ஆனால் வீடு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்த்து. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, இளையராஜா மதுவோடு விஷம் கலந்து குடித்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இளையராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது குறித்து இளையராஜாவின் தம்பி தமிழ்ச்செல்வன் நவல்பட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளையராஜா இறப்பதற்கு முன்பு இரண்டு பக்க கடிதம் ஒன்றை உருக்கமாக எழுதியுள்ளார்.அதில், தான் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் அப்பா, அம்மா, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவிற்கு முழு காரணம் எனது குடிப் பழக்கம் மட்டும் தான். இது எனது சுய சிந்தனையுடன் எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.


Updated On: 16 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...