/* */

சமயபுரம் அருகே சிக்கிய மது பாட்டில்கள் - தப்பியோடிய இருவர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை-மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்

HIGHLIGHTS

சமயபுரம் அருகே சிக்கிய மது பாட்டில்கள் - தப்பியோடிய இருவர் கைது
X

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை-மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் எஸ்ஐ ராஜசேகர் தலைமையில் உதவி ஆய்வாளர் குமரேசன், எஸ்எஸ்ஐ ஜெயசீலன்,போலீசார்கள் குரு, ராஜேஷ், ராஜேந்திரன் மற்றும் வில்பிரட் ,பாலமுருகன்,ஆகிய கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 4320 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த லாரன்ஸ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் தப்பியோடிய லாரன்ஸை வலைவீசி தேடி வந்த நிலையில் இன்று தப்பியோடிய குற்றவாளிகள் மண்ணச்சநல்லூர் தெற்கு இருங்களூரை சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்(45) மற்றும் சமயபுரம் கல்லுக்குடியை சேர்ந்த ராஜா முஹம்மது மகன் சர்தார் (45) ஆகியோரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 22 July 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது