/* */

திருச்சி தரை கடைகளில் திருடிய 3 சிறுவர்கள் கைது

திருச்சி தரைக்கடைகளில் திருடிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

திருச்சி தரை கடைகளில் திருடிய 3 சிறுவர்கள் கைது
X

திருச்சி உறையூர் நவாப்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கமால் பாரூக் (வயது 26). இவர் திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் தெப்பகுளம் அருகில் தரைக்கடை போட்டு துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த பகுதியில் கடை போடும் வியாபாரிகள் அனைவரும் இரவு நேரத்தில் கடையை பாதுகாப்பு கருதி தார்பாய் சீட் போட்டு கட்டிவைத்து விட்டு செய்வது வழக்கம்.

ஆனால் இந்த பகுதியில் உள்ள தரைக்கடைகளில் அடிக்கடி, கட்டை அவிழ்த்து இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் துணிகளை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர் என்று வியாபாரிகள் தரப்பில் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதில் பல லட்சம் அளவில் துணிகள் திருடியுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதே போல நேற்று இரவு அனைவரும் கடையை கட்டி வைத்து விட்டு சென்ற பிறகு, அந்த கடைகளில் இருந்து டவுன் ஸ்டேஷன், மூவேந்தர்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 15, 16, 17 வயதுடைய 3 சிறுவர்கள் அதிகாலை 2 மணியளவில் துணிகளை திருடிய போது கையும் களவுமாக வியாபாரிகள் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதனிடையே கமால்பாரூக் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?