/* */

மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளை- போலீஸ் கவனிக்குமா?

மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளையும் நடக்கிறது. போலீஸ் கவனிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளை- போலீஸ் கவனிக்குமா?
X
திருட்டு மணல் அள்ளப்படும் காவிரி ஆறு.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் சமீபகாலமாக சட்டவிரோதமாக அனுமதியின்றி இருசக்கர வாகனங்கில் மூட்டை, மூட்டையாக மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது.

காவிரி கரையோரம் உள்ள கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, பெருகமணி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் தொடங்கும் மணல் கடத்தல் அதிகாலை வரை நீடிக்கிறது என்று அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதில் திருப்பராய்த்துறை, பெருகமணி, முத்தரசநல்லூர் ஆகிய இடங்களில் ஆற்றுக்குள்ளே டூவீலர் செல்ல வழி இருப்பதால் மணல் மூட்டைகளை கட்டி அதில் ஏற்றி கடத்தி செல்கின்றனர் என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.

இதில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கும் அதிகமான அளவில் சிமெண்ட் மூட்டைகளில் மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் கடத்தல் பொதுப்பணித்துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் அந்த பகுதி மக்கள்.

இது சில்லறை வியாபாரம் தானாம். நமக்கு தான் பெரிய பிசினஸ் இருக்கிறதே என அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஹை-வே பேட்ரோல் போலீசார் பல நேரம் இதை கண்டுகொள்வதில்லை. சமீபகாலமாக மணல் கடத்தல் கும்பல் வழிபறிகளிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இரவு அல்லது அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையோரத்தில் சந்திக்கும் ரகசிய ஜோடிகளை குறிவைத்து இந்த வழிப்பறி கும்பல் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளது.

மேலும் ஆற்றில் குளிக்க செல்பவர்களின் உடைகளில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன், பணம் போன்றவற்றையும் திருடி சென்று விடுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர முன்வராததால் இவர்கள் மணல் கடத்தலோடு சேர்த்து வழிப்பறியையும் தடை இல்லாமல் செய்து வருகின்றனர்களாம். ஆரம்பத்தில் இருந்தே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்த மணல் கடத்தலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அவர்களாலும் தற்போது கடத்தல் கும்பல் வழிபறியில் ஈடுபடுவதை கண்டிக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது. போலீசார் கண்டு கொள்வார்களா? என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?