/* */

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட்

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட்
X

பைல் படம்.

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகருக்கு ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்த போது, ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் மட்டப்பலகையால் ஜெயந்தியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஜெயந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சந்திரசேகருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தனர்.

Updated On: 4 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!