/* */

திருச்சி:கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி மாவட்டம் கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி:கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
X

திருச்சி மாவட்டம் கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியாலம் ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 7 வருடங்களாக 100 நாள் வேலைக்கு ஒரே அலுவலரே மாறி மாறி அனைத்து வேலைகளையும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 100 நாட்களுக்கு ஒரு அலுவலர் நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த ஊராட்சியை பொருத்தவரை ஒரே அலுவலரே கடந்த 7 வருடமாக இந்த பணியை பார்த்து வருவதால் ஏராளமான முறை கேடு நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆகையால் இன்று 1 மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்கள் நூறு நாள் வேலை அலுவலரை மாற்ற வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது ஒன்றிய ஆணையர் சீனிவாசன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?