/* */

திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தற்கொலை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் குடும்ப தகராறு காரணமாக பெண் அரளி விதை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தற்கொலை
X

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகில் உள்ள சிறுகமணி மலையப்ப நகரை சேர்ந்தவர் அரங்கநாதன் .(வயது 42). இவருடைய மனைவி இளமதி (வயது 38). தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 22-ந்தேதி அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்தவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது இறந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்