/* */

திருச்சி காவிரி பாலத்தில் ரயிலை மறிக்க வந்த அய்யாக்கண்ணு கைது

திருச்சி காவிரி பாலத்தில் ரயிலை மறிக்க முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி காவிரி பாலத்தில் ரயிலை மறிக்க வந்த அய்யாக்கண்ணு கைது
X

திருச்சி காவிரி பாலத்தில் வைகை  எக்ஸ்பிரஸ்  ரயிலை மறிப்பதற்காக வந்த  விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.

விவசாய கடனை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரம் டெல்லியில் நூறு நாட்களுக்கும் மேலாக நூதன முறையில் பல போராட்டடங்களை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு.

திருச்சியை சேர்ந்த இவர் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறகோரி நடைபெறும் போராட்டத்தை ஆதரித்தும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணுவை போலீசார் ஜீப்பில் ஏற்றினர்.

இதற்காக இன்று காலை திருச்சி ஓயாமாரி சுடுகாடு அருகில் காவிரி ரயில்வே பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்த அய்யாக்கண்ணுவை உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்் சண்முகவேல் கைது செய்து உறையூர் காவிரி திருமண மண்டபத்தில் தங்க வைத்தார். அதேபோல அந்த அமைப்பின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 95-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...