/* */

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை. ரூ.60 ஆயிரம் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
X

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). இவரது மனைவி பார்வதி (வயது 28). இந்த தம்பதிகள் சரக்கு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் காய்கறி வியாபாரத்துக்கு சென்றுவிட்டார்.

பின்னர் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அங்கு அறையில் வைத்திருந்த ஒரு பித்தளை அண்டா, ஒரு பித்தளை சர்வம், 2 குத்து விளக்குகள் ஆகியவையும் திருட்டு போயிருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு இந்த துணிகர திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  7. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  8. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  10. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!