/* */

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?

திருச்சி அம்மா மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார் என உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
X

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் எதிர்பாராத விதமாக நடந்து சென்ற நபர் மீது மோதினார். இந்த விபத்தில் அந்த நபர் தலையில்பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போனவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Oct 2021 12:30 PM GMT

Related News