/* */

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி-5 பேர் காயம்

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி-5 பேர் காயம்
X
முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கருப்பு கோயில் கொட்டம் என்ற இடத்தில் அய்யம்பாளையத்தில் இருந்து தண்டலைக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பெரமூரை சேர்ந்த சுதாகர், ராஜாத்தி, வீரமணிபட்டியைச் சேர்ந்த சந்திரா, நாச்சம்பட்டியை சேர்ந்த மலர்கொடி என்கிற மலர் வேளகாநத்தத்தை சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் படுகாயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சுதாகர், ராஜாத்தி, சந்திரா, மலர்கொடி, ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது47) என்பவர் படுகாயமடைந்து இறந்துவிட்டார் . இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் துரைராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்