/* */

திருச்சி அருகே கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்

வேறொரு பெண்ணுடன் பேசிய கூட்டுறவு ஆய்வாளரை தாக்கிய மனைவி குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி அருகே  கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்
X

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் கூட்டுறவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜீவானந்தம் (வயது 34). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பவானிதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜீவானந்தம் அவருடைய தூரத்து உறவினரான எமல்டாமேரி என்ற பெண்ணை தன்னுடைய வீட்டில் அழைத்து பேசியுள்ளார். இது பவானிதேவிக்கு தெரியவந்ததையடுத்து அவருடைய உறவினர்கள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என மொத்தம் 8-க்கும் மேற்பட்டோர் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று எமல்டாமேரி, ஜீவானந்தம் ஆகிய இருவரையம் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து ஜீவானந்தம் தொட்டியம் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...