/* */

முசிறி பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

முசிறியில் 7 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; 2 பேர் கைது.

HIGHLIGHTS

முசிறி பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் முசிறி காவிரி பெரியார் பாலம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தொட்டியம் பகுதியை சேர்ந்த நல்லசிவம் (வயது 19), விஜய் (21) ஆகியோரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களையும், தொட்டியத்தில் 2 ஆடுகளையும் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  2. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  6. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  7. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  9. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்