/* */

முசிறி அருகே குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

HIGHLIGHTS

முசிறி அருகே குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
X
மழைநீர் குட்டை (பைல் படம்)

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி கனகவள்ளி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் ஜீவன் (வயது 2).

சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் குழந்தையை தினேஷ்குமாரின் தாயார் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டு அருகே ஜீவன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது, வீட்டு அருகே ஒரு குழியில் மழைநீர் தேங்கி நின்றிருந்தது. இதில் தவறி ஜீவன் விழுந்தான். இதை யாரும் கவனிக்காததால் அவன் மழைநீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான்.

இந்த நிலையில் தினேஷ்குமாரின் தாயார் குழந்தையை காணாது தேடியபோது, குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பேரனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலிக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 24 Nov 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...