/* */

துவரங்குறிச்சி அருகே பழமையான சிவன் கோயிலில் சாமி சிலை திருட்டு

துவரங்குறிச்சி அருகே பழமையான சிவன் கோயிலில் சாமி சிலை திருட்டு போனது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

துவரங்குறிச்சி அருகே பழமையான சிவன் கோயிலில் சாமி சிலை திருட்டு
X

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அழகாபுரி கிராமம் பழையபாளையத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உள்ளே விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சிவன், பார்வதி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னதிகளில் அதற்கான சிலைகள் உள்ளன.

கோயிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் இன்று காலை 7 மணிக்கு வந்து பார்த்தபோது சண்டிகேஸ்வரர் சாமி சிலையை மட்டும் காணவில்லை. உடனே அவர் கோயில் நிர்வாகிகளான மருங்காபுரி ஜமீன்தாரிடம் தகவல் கொடுத்தார். அவர்கள் கோயிலுக்கு வந்து சாமி சிலைகளை பார்த்தனர். இவற்றில் 3 அடி உயரம் கொண்ட சண்டிகேஸ்வரர் கல்லினால் ஆன சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இது குறித்து துவரங்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  6. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  7. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...