Begin typing your search above and press return to search.
நகர்ப்புற தேர்தல்: திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் விருப்ப மனு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.
HIGHLIGHTS
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பெறப்பட்டது.
மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு ப கிருஷ்ணன், கே.கே. பாலசுப்பிரமணியன், வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு, இந்திரா காந்தி மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.