/* */

திருச்சி அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள செங்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி வள்ளி (வயது 40). இவர், நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி கூச்சலிட்டதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து ஒருவனை பிடித்தனர். பின்னர் அவனை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் தெற்கு சித்தாம்பூரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்றும், அவன் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் பதுங்கி இருந்த பூபாலன் (19) என்பவரை பிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து முக்கால் பவுன் தாலி சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Nov 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!