/* */

முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் கோபிநாத் (வயது 15). இவர் தண்டலை புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கோபிநாத்தும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சிலரும் அருகே உள்ள அம்மாயி குளத்தில் லாரி டியூப் உதவியுடன் குளித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கோபிநாத் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் மற்றும் முசிறி மீட்புப்பணி குழுவினர் அங்கு வந்து குளத்தில் இறங்கி கோபிநாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர் கோபிநாத் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்