/* */

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு

திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு
X

திருச்சி எம்.ஆர். பாளையம் வன உயரியல் பூங்காவில் 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலயைில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் கோழிகமுத்தியிலுள்ள முகாமில், தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட ரோகிணி என்ற 60 வயது யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து எம்.ஆர். பாளையத் திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட வனத்துறை கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் இங்கு முகாமிட்டு யானை ரோகிணியின் உடல்நலத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்டம். ராஜபாளையத்திலிருந்து இந்திரா என்கிற லட்சுமி என்ற 25 வயது யானையும் நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.பாளையம் முகாமிற்கு பராமரிப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 8 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 23 Dec 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்