Begin typing your search above and press return to search.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய ரூ.60 லட்சம் காணிக்கை கிடைத்தது
HIGHLIGHTS
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மாதம் 2 முறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்தில் 2-வது முறையாக நேற்று கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் உண்டியல்களில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வந்த ரூ.60 லட்சத்து 19 ஆயிரத்து 9 ரொக்கமும், 2 கிலோ 58 கிராம் தங்கமும், 2 கிலோ 130 கிராம் வௌ்ளியும், அயல்நாட்டு பணம் 38-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.