/* */

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

திருச்சி மின்பழுதை சரி செய்ய முயன்ற விவசாயி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
X

பைல் படம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). விவசாயியான இவர் நேற்று மாலை தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமல், தானே அதை சரி செய்வதற்காக அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி உள்ளார்.

அப்போது அங்கே இருந்த மின்மாற்றியிலிருந்து, வந்த மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  5. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  6. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!