Begin typing your search above and press return to search.
திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
திருச்சி மின்பழுதை சரி செய்ய முயன்ற விவசாயி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). விவசாயியான இவர் நேற்று மாலை தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமல், தானே அதை சரி செய்வதற்காக அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி உள்ளார்.
அப்போது அங்கே இருந்த மின்மாற்றியிலிருந்து, வந்த மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.