/* */

திருச்சி அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

திருச்சி அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் அருகே லால்குடி செல்லும் சாலையில் தாளக்குடி கிராம கோவிலான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

இதேபோல, அருகிலிருந்த மற்றொரு கோவிலான அடைக்கலம் காத்த அம்மன் கோவிலின் கதவும் உடைக்கப்பட்டு சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், கொள்ளிடம் நெம்பர் 1 டோல்கேட் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  2. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  3. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  5. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...
  6. ஈரோடு
    கோபி அருகே வருவாய்த் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
  7. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  10. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...