/* */

கொள்ளிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு

கொள்ளிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெற்பயிர்களை கலெக்டரிடம் காட்டி முறையீடு செய்தனர்.

HIGHLIGHTS

கொள்ளிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
X

கொள்ளிடம் வெள்ளத்தினால் நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் காட்டி இழப்பீடு கேட்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு லட்சத்து பத்தாயிரம் கன அடி உபரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளிலும் திறந்து விடப்பட்டது. கொள்ளிடத்தில் என்பதாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று லால்குடி தாலுகாவில் கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அரியூர், டி. கள்ளிக்குடி, செங்கரையூர், அன்பில் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டரிடம் காட்டி தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்களிடம் கலெக்டர் அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Updated On: 9 Aug 2022 3:47 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்