/* */

கோவிலுக்குள் நேர்ந்த விபரீதம்: ஆடையில் தீ பிடித்து 6 வயது சிறுமி பலி

விளாத்திகுளம் அருகே விநாயகர் கோவிலில் சாமி கும்பிட சென்ற சிறுமியின் ஆடையில் விளக்கு தீ பிடித்ததில், 6 வயது சிறுமி பலி.

HIGHLIGHTS

கோவிலுக்குள் நேர்ந்த விபரீதம்:  ஆடையில் தீ பிடித்து  6 வயது சிறுமி பலி
X

விளாத்திகுளம் அருகே கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட சென்ற சிறுமியின் ஆடையில் கோவில் விளக்கு தீ பிடித்து எரிந்து 6 வயது சிறுமி பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், மதிவதன தம்பதியினர், இவர்களுக்கு தெய்வவெனுசியா(6) மற்றும் தெய்வ கனுசியா(4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன.வேல்முருகன் விவசாய வேலை செய்து வருகிறார், மதிவதன வீட்டில் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் தெய்வ வெனுசியா, தெய்வ கனுசியா உள்ளிட்ட நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தெய்வவெனுசியா கோயில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுவிட்டு திருநீர் பூசுவதற்காக உள்ளே சென்றபோது உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ தெய்வவெனுசியா ஆடையின் மீது பிடித்துள்ளது.

இதில் உடல் முழுவதும் நெருப்போடு அலறியடித்து வீட்டிற்கு தெய்வவெனுசியா ஓடி வந்துள்ளார். அவர் அணிந்திருந்த கவுன் நைலான் என்பதால் உடம்போடு தீ ஒட்டி அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது தாயார் என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தெய்வ வெனுசியாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்தார்.சிறுமியின் உயிரிழப்பு ஜமீன் செங்கப்படை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Sep 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!