கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் திருடியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ராஜிவ் நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் கோவிலின் பின்புறம் உள்ள கதவினை கடப்பாறை மற்றும் அரிவாளால் உடைத்து கோவிலுக்குள் சென்று அங்குள்ள உண்டியலை உடைத்து சுமார் ரூ.8000 -த்தை திருடி சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல கோவிலுக்கு பூஜை செய்வதற்காக காலை சென்ற பூசாரி மணிமுருகன் கோவிலின் பின்புற கதவு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து விளாத்திகுளம் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கைரேகை பிரிவிற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திருடிச் சென்ற நபர் உண்டியலை உடைப்பதற்கு கொண்டு வந்த கடப்பாறை மற்றும் அரிவாளை அங்கேயே விட்டுச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா