/* */

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

விளாத்திகுளத்தில் மனைவியை கொன்ற கணவனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
X

ஜீலிபாரத் 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையம் தெருவை சேர்ந்த அருணாதேவிக்கும் திருநெல்வேலி சிவகிரியை சேர்ந்த ஜீலிபாரத் (42) என்பவருக்கும், 2012 ஆண்டில் திருமணமானது. கணவன் - மனைவிக்கு இடையே ஏற்றபட்ட குடும்ப பிரச்சினையால், அருணாதேவி, விளாத்திகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 07.11.2015 அன்று ஜூலிபாரத் தனது மனைவியை பார்க்க விளாத்திகுளத்திற்கு வந்தபோது, அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில், ஜூலிபாரத் தனது மனைவி அருணாதேவியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூலிபாரத்தை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் , இன்று ஜூலிபாரத்திற்கு, ஆயுள் தண்டனையும், ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 5 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  2. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  3. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  4. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  7. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  8. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்