/* */

போதையில் தினமும் தகராறு: கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்ற மனைவி கைது

விளாத்திகுளம் அருகே போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போதையில் தினமும் தகராறு: கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்ற மனைவி கைது
X

கைது செய்யப்பட்ட இந்திரா.

தூத்துக்கு மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரம் தாலுகா மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி(32). இவரது மனைவி இந்திரா(28). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகிறது. இவர்களுக்கு வைத்திஷினி(12) மற்றும் முகாசினி(8) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் காரணமாக மாடசாமி கடந்த சில மாதங்களாக இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. . இந்நிலையில் இந்திரா விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை உணவில் கலந்து மாடசாமிக்கு கொடுத்துள்ளார்.

உணவில் களைக்கொல்லி மருந்து வாசம் வருவதை உணர்ந்த மாடசாமி அருகிலிருந்தவர்களிடம் உணவை காட்டிய போது உணவில் விஷ மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் சோப்பு நுரையை கலக்கி மாடசாமிக்கு கொடுத்து முதலுதவி செய்து சிகிச்சைக்காக எட்டயாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் மாடசாமி மனைவி இந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Nov 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு