/* */

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
X

திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அருள்குமரன் (25). இவர் பிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு திருச்செந்தூரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் இவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் விரக்தியில் இருந்து வந்தார். தினமும் இவர் அதிகாலை 3 மணிக்கு தூங்கி விட்டு பகலில் எழுந்திருப்பது வழக்கமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தனது அறையில் தூங்கச் சென்றவர் மதியம் வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் நாகரத்தினம் அறையின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் அருள்குமரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Dec 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!