/* */

குரும்பூரில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி கார் மோதி உயிரிழப்பு

குரும்பூரில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குரும்பூரில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி கார் மோதி உயிரிழப்பு
X

குரும்பூரில் கார் மாேதிய விபத்தில் உயிரிழந்த மாணவி சக்தி சுவாதி.

திருச்செந்தூர் - குரும்பூர் சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகள் சக்தி சுவாதி(8). கீழநாலுமாவடியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குரும்பூரில் உள்ள திருமணமண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது நெல்லையிலிருந்து ஆறுமுகநேரிக்கு சென்று கொண்டிருந்த கார் மாணவி சக்தி சுவாமி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மீது அந்த வழியாக சென்ற பைக் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சக்தி சுவாதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் காரை ஓட்டி வந்த ஆறுமுகநேரி கானியாளர் தெருவை சேர்ந்த சாமுவேல் ஞானராஜ் மகன் அம்புரோஸ் டேவிட் பிராங்கோ(36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Nov 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...