/* */

திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை: அக்.30 வரை நீட்டிப்பு

திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு அக்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை: அக்.30 வரை நீட்டிப்பு
X

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு 30.10.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு 30.10.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, திருச்செந்தூர், ஐ.டி.ஐ-யில் சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தச்சர் மற்றும் உலோகத்தகடு வேலையாள் தொழிற்பிரிவுகளில் இடம் உள்ளன. இவற்றிற்கான கல்வித்தகுதி, 8ஆம் வகுப்பு. எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750/- (வருகை நாட்களுக்கு ஏற்ப), கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை - இரண்டு செட், விலையில்லா காலணி - ஒருசெட் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களை 04639-242253 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 13 Oct 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்