/* */

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

திருசெந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளைமுதல் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், கொரோனா பரவலைத் தடுக்க திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தரிகளின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என கூறியுள்ளார்,

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுகிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 27 Aug 2021 5:53 AM GMT

Related News