/* */

பால்குடம், சீர்வரிசை தட்டுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு ஊர்வலம்

திருச்செந்தூர்ல் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு பால்குடம், வள்ளி அம்பாளுக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பால்குடம், சீர்வரிசை தட்டுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு ஊர்வலம்
X

தமிழ்நாடு வேடுவர் நல சங்கம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம், வள்ளி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்றனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பால் குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு வேடுவர் நலச்சங்கம் சார்பில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு பால் குடம் எடுத்தும், வள்ளி அம்பாளுக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதனை முன்னிட்டு ரயில் நிலையம் அருகே உள்ள ஆனந்த விநாயகர் கோயிலிருந்து பெண்கள், ஆண்கள் சிறுவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வடக்கு ரதவீதி, சன்னதி தெரு வழியாக மேலும் சுவாமி வள்ளி அம்பாளுக்கு பல்வேறு தம்பூலன்களில் பட்டுசேலை, பூ, ஆரஞ்சு, ஆப்பிள் திராட்சை உள்ளிட்ட பல்வேறு பல வகைகள் அடங்கிய சீரிவரிசைகளை ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர் பின்னர் கோவிலில் மூலவரை வழிபட்டுவிட்டு வள்ளியம்மன் சன்னதியில் சீர்வரிசை கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 26 Feb 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!