/* */

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது

முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பெட்டகம் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது
X

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்தமருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது

நாடு முழுவதும் கொரானா வைரஸ் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பாக தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு என்பது அதிகளவில் காணப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்துள்ளது இந்நிலையில் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு ஊழியர்கள் முன் களப்பணியாளர்கள் பொது மக்களுக்கும் கொரானா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி உத்தரவின்பேரில், மாநகராட்சிக்கு உட்பட்ட பிஅன்டி காலனியில், கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முன் களப்பணியாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சித்தா மருத்துவர் டாக்டர்.முத்துமாரி கலந்து கொண்டு கொரானா நோய் வராமல் தடுப்பதற்கு முன்களப்பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என எடுத்துரைத்தார்.


பின்னர், முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பெட்டகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Updated On: 12 Jun 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  2. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  4. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  5. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  6. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  7. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  8. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை