/* */

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் திமுக மீனவர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்
X

தூத்துக்குடியில் திமுக மீனவரணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது குறைந்து வருகிறது. இதில் தூய்மைபணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இவ்வாறு முன்களப்பணியாளர்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 24, 32 வார்டு பகுதி சார்பில் திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மற்றும் வார்டு மகளிரணி நிர்வாகி கிரிக்டர் ஆர்தர் சார்பில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மரக்குடித்தெருவில் இன்று நடைபெற்றது.

இதில், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, பேராசிரியை பாத்திமாபாபு, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், திமுக வட்ட செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சேசையா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநகராட்சியின் 250 தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னடைகள் போர்த்தி அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நிவாரணமாக வழங்கினர்.

இதில் கலந்து கொண்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரிசையில் நின்று நிவாரணப்பொருட்களை பெற்றுச்சென்றனர்.

Updated On: 20 Jun 2021 2:17 AM GMT

Related News