/* */

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு எஸ்.பி. பாராட்டு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல் துறையினருக்கு மாதம்தோறும் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், பயிற்சி உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் மற்றும் தங்க செயினை பறித்து சென்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவல்லநாடு பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்து திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்த, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ், பெண் தலைமை காவலர் தனலெட்சுமி, முதல் நிலை காவலர் சதீஷ் தணிகை ராஜா, காவலர்கள் மகேந்திரன், முகம்மது கோரி, கந்தசாமி மற்றும் பெண் காவலர் சரவணபிரியா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 35 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட், ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் கைலயங்கிரிவாசன், சேரகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் நாராயணசாமி, காவலர் ஜான் அந்தோணி ராஜ் மற்றும் ஸ்ரீவைகுண்ட காவல் நிலைய காவலர் பட்டவராயன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை சென்னையில் வைத்து கைது செய்து, அவர்களிடம் இருந்த வழக்கின் சொத்தான ரூபாய் 4,52,000 பணத்தை மீட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் சுரேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேரை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றி நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், காவலர்கள் சரவணக்குமார் மற்றும் சிவா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நின்று கொண்டிருந்த லாரி மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களிலிருந்து பேட்டரிகளை திருடிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 72,000 மதிப்பிலான 7 பேட்டரிகளை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பூபதி ராஜா, காவலர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின்போது 142 வழக்குகளை முடித்து சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், முதல் நிலை காவலர் ஜஸ்டின் பிரபாகரன், காவலர்கள் சதீஷ்பாலா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் 9 பேரை அடையாளம் கண்டு கைது செய்ய காவல் ஆய்வாளர் அவர்களுக்கு உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் பொன்பாண்டிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை, கொலை முயற்சி, திருட்டு உட்பட 8 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து நிலையத்தில் ஆஜர் செய்து விசாரணை அதிகாரிக்கு உதவியாக இருந்த தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் மார்க்கெட் பகுதியில் சற்று மனநலம் பாதித்தவர் போல இருந்த நபரை பார்த்து அவரை விசாரித்துபோது அவர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒருவரின் புகைப்படத்துடன் ஒத்துப்போவதை கண்டறிந்து, அந்த நபரை திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து கேரள மாநில காவல் நிலைய அதிகாரி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் கவிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, 6 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Updated On: 25 Feb 2023 12:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி