/* */

தூத்துக்குடி அருகே கந்து வட்டியால் தற்கொலை: மேலும் ஒருவர் கைது

கந்து வட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது.

HIGHLIGHTS

தூத்துக்குடி அருகே கந்து வட்டியால் தற்கொலை: மேலும் ஒருவர் கைது
X

தூத்துக்குடியில் கந்து வட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்திபன்.

தூத்துக்குடியில் கந்து வட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகேயுள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரம்மராஜன் (55) என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் சிவசிதம்பரம் என்பவரிடம் வங்கி வட்டிக்கு கடன் ரூ.3.5லட்சம் கடன் பெற்றுள்ளார். பின் சிவசிதம்பரம் அதை கந்துவட்டியாக மாற்றியுள்ளார். அதனால் அந்த கந்து வட்டி கடனை அடைப்பதற்கு கடன் பெற்ற பிரம்மராஜன் பேரூர் பகுதியை சேர்ந்த கணபதி மகன் அருணாசலம் (45) என்பவரிடமும் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் பார்த்திபன் (31) என்பவரிடமும் அதிக வட்டிக்கு பணத்தை கடனாக வாங்கி மேற்படி சிவசிதம்பரத்திடம் கொடுத்து வந்துள்ளார்.

மேற்படி பிரம்மராஜன் வாங்கிய கடன் ரூ.3.5லட்சத்திற்கு சிவசிதம்பரத்திடம் இதுவரை ரூ.10லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். இருப்பினும் அசல் தொகையில் ரூ.1லட்சம் மட்டுமே கழிந்துள்ளதாக கூறி, மீதி பணம் ரூ.9லட்சத்தை உடனே திருப்பித் தரவேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் மற்றும் அருணாசலம் ஆகிய இருவரும், தாங்கள் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கேட்டு பிரம்மராஜனுக்கு அவர்களும் நெருக்கடி கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து 13.09.2021 அன்று இரவு சிவசிதம்பரத்தால் அனுப்பி வைக்கப்பட்ட இருவர் பிரம்மாஜனின் வீட்டிற்கு வந்து அவரிடம் கடனை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதையடுத்து, மனமுடைந்த பிரம்மராஜன் வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரம்மராஜனின் மனைவி ரேவதி (47) என்பவர் அளித்த புகாரின் பேரில் தட்டாப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரடரிக்ராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காசி, புதூர் காவல் நிலைய காவலர் பிரபு பாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசாரை விசாரணை மேற்கொண்டு, இதில் சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஸ்ரீவைகுண்டம் கீழ கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் அருணாச்சலம் (45) என்பவரை கடந்த 14.09.2021 அன்று கைது செய்தனர். மேலும் இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்பேரில் கடந்த 11.10.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் ஈடுபட்ட மற்றொரு எதிரியான ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பார்த்திபன் (31) என்பவரை இன்று (13.10.2021) மேற்படி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்ற எதிரிகளையும் தேடி வருகின்றனர். கந்து வட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் மீது சட்டப்படியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை