சமூக வலைதளங்களில் வெடிகுண்டு, அரிவாளுடன் வீடியோ: 2 பேர் கைது

தூத்துக்குடியில் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சமூக வலைதளங்களில் வெடிகுண்டு, அரிவாளுடன் வீடியோ: 2 பேர் கைது
X

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சுரேஷ், அய்யப்ப நயினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு சம்பந்தப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீவைகுண்டம் மார்த்தாண்டநகர், திடல் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (23), புதுக்குடியைச் சேர்ந்த முருகபெருமாள் மகன் அய்யப்ப நயினார் (24), ஆகிய இருவரும் தங்களது வாட்ஸ் அப்பில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் அய்யப்பநயினார் ஆகிய இருவரையும் கைது செய்தார். சாதி மத ரீதியாக பிரச்சனை ஏற்படும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலோ புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி அச்சுத்தல் ஏற்படுத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 18 Dec 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்