குரும்பூர் அருகே அரசு பஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

குரும்பூர் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குரும்பூர் அருகே அரசு பஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
X

குரும்பூர் அருகே உள்ள புறையூரில் அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ உருக்குலைந்து கிடக்கிறது.

குரும்பூர் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்தவர் சரவணன் மனைவி அமுதா(48). வல்லநாட்டை சேர்ந்தவர் கந்தன் மனைவி மாரிசெல்வி(50). இவர்கள் இருவரும் நேற்று குடும்பத்துடன் நேற்று ஆட்டோவில் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணிய மணிகண்டன்(45) ஓட்டினார்.

குரும்பூர் அடுத்த புறையூர் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அமுதாவும், மாரிசெல்வியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் சுப்பிரமணிய மணிகண்டன், குழந்தைகள் நவீன்ராஜா, மஞ்சு, மிதுன் உட்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வைத்தனர். இதுகுறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 5:06 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்