/* */

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்போர் கவனிக்க வேண்டியவை..

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்போர் கவனிக்க வேண்டியவை..
X

காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தமிழகம் முழுவதும் 2022 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்), மற்றும் மூன்றாம் பாலினம் ஆகியோர் அடங்கிய விண்ணப்பதாரர்களுக்கு நாளை (27.11.2022) எழுத்துதேர்வு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்), சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) ஆகிய 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த எழுத்து தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9388 ஆண் விண்ணப்பதாரர்களும், 2249 பெண் விண்ணப்பதாரர்களும், 4 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 11641 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில், எழுத்துத் தேர்வில் பங்கேற்பவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கியுள்ள அறிவுரைகள் விவரம் வருமாறு:

விண்ணப்பதாரர் தேர்வுக்கூட சீட்டினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும். அதில் ஏதேனும் சந்தேகங்கள் மாற்றங்கள் இருந்தால் வாரியத்தின் உதவிமையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வுக்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால் விண்ணப்பதாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று எழுத்துத் தேர்வின் போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கூட சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தினை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வரவேண்டும்.

விண்ணப்பதாரர் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். தேர்வு மையத்தினை எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. தேர்வுக்கூட சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.

தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.

தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட அல்லது எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் அல்லது பிற மின்சாதன பொருட்கள் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர் தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.

தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். மேலும், அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறித்தி உள்ளார்.

Updated On: 26 Nov 2022 3:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!