/* */

வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூர் பாதயாத்திரை: பக்தர்களுக்கு காவல் துறை வேண்டுகோள்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை காவல் துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூர் பாதயாத்திரை:  பக்தர்களுக்கு காவல் துறை வேண்டுகோள்
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜுன் 2 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழா 1 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்தவாறு உள்ளனர்.

அவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் இடது புறமாக குழுக்களாக நடந்து செல்கின்றனர். அதே சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் எப்போதும் இடது புறமாகவே வாகனத்தை இயக்குவதால், இடது புறத்தில் செல்லும் பக்தர்கள் பின்னால் வரும் வாகனங்கள் எவ்வாறு வருகின்றன என்பதை பார்க்க இயலாது.

இதனால், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளது. இடது புறமாக வரும் வாகனங்கள் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது மோதாமல் இருக்க வாகனங்களை வலது புறம் ஏறிச்செல்வதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

எனவே, இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை பாதசாரிகள் கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளளாம்.

அதே போன்று பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரம் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு, இரவு நேர பாதயாத்திரையை தவிர்க்க வேண்டும். ஒருவேளை இரவு நேர பாதயாத்திரை மேற்கொண்டால் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflect Sticker) ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும்.

இந்த வைகாசித் திருவிழாவை விபத்தில்லாமல், பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், திருக்கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் ஜாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலானவற்றையோ, கொடிகளையோ கொண்டு வரவோ கூடாது.

சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வைகாசி விசாக திருவிழா அமைதியாகவும், சிறப்புடனும் நடைபெற பக்தர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்

Updated On: 31 May 2023 6:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு