/* */

தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
X

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியன் கயாக் மற்றும் கனோயிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு அசோசியேசன் ஆப் கயாக் அண்ட்கனோயிங் ஆகியவை சார்பில், தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் கடல் சாகசப் போட்டி மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் உள்ளிட்ட கடல் சாகசப் போட்டிகள், இன்று தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறும் கடல் சாகச விளையாட்டுப் போட்டியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில், 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 130 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர்கள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இந்த கடல் சாகச விளையாட்டு போட்டிகள் கடலில் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை சென்று வரும் வகையில் நடைபெறுகிறது. நின்று கொண்டே துடுப்பூ செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்தோனேசிய தலைநகர் பட்டாயாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும் பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேஷ், அரியானா, டில்லி ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கர், உள்ளிட்ட 13 -மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய இடங்களில் இருந்து பங்கேற்கின்றனர். வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும் 10-ஆயிரம் ரூபாய் பரிசும், இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் 7-ஆயிரம் ரூபாய் பரிசும் மூன்றாவது பரிசாக வெங்கள பதக்கம் 5-ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.


கடல் சாகச விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2023 7:01 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்