/* */

ஊரடங்கால் வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லை : தமிழக அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஊரடங்கால் வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லை : தமிழக அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே பேய்க்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கதலி, மலையேத்தம் மற்றும் ரசகதலி உள்ளிட்ட பல ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.இப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை தொடங்குவது வழக்கம் இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் சென்னை மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் வாழைத்தார்கள் தோட்டத்திலேயே பழங்கள் பழுத்து அழுகி வருகின்றன.

இதனால் அப்பகுதியில் வாழைத்தார் பயிரிட்ட விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

Updated On: 11 Jun 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    50 பேர் சாப்பிடும் பெரிய ஆர்டர்..! இனி Zomato டெலிவரி செய்யும்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  3. நாமக்கல்
    சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள்...
  4. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  5. ஈரோடு
    மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!
  7. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  8. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  9. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  10. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?