/* */

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து கட்டிட ஒப்பந்தகாரர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து கட்டிட ஒப்பந்தகாரர் உயிரிழப்பு
X

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் ஜெயக்குமார்(45). கட்டிட ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் உலகராஜ் மகன் அஜித்குமார்(25), குருசாமி மகன் செல்வம்(28). சுப்பையா(51). இவர்கள் 4 பேரும் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பசுவந்தனை அருகே உள்ள கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பட்டியில் நடந்த நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்தனர்.

பின்னர் மாலையில் இவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். புதுப்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து, டி.எஸ்.பி.கலைக்கதிரவன் மற்றும் கொப்பம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த அஜித்குமார், செல்வம், சுப்பையா ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 1:40 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்