/* */

கோவில்பட்டி அருகே வர்ணம் பூசும் தொழிலாளி அடித்துக் கொலை: 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே வர்ணம் பூசும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி அருகே வர்ணம் பூசும் தொழிலாளி அடித்துக் கொலை: 2 பேர் கைது
X

கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட மாரியப்பன்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர்-சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்காமணி மகன் மாரியப்பன் (28). கோயம்புத்தூரில் வர்ணம் பூசும் தொழில் செய்து வந்தார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனராம். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த பெண் வீட்டார் அந்தப் பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெறு ஒரு இளைஞருடன் திருமண ஏற்பாடு செய்துவிட்டனர்.

இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாரியப்பன் கோயம்புத்தூரில் இருந்து குளத்தூர் சுப்பிரமணியபுரத்துக்கு வந்துள்ளார். 19ஆம் தேதி காலை மாரியப்பன் கிராமத்தின் பனங்காட்டுப் பகுதியில் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில் 18 ஆம் தேதி இரவு மாரியப்பன் தான் காதலித்த பெண்ணை சந்திக்க முயற்சித்துள்ளார் என தெரியவந்தது.

அப்போது அந்தப் பெண்ணின் உறவினர்களான மாடசாமி மற்றும் முனியசாமி என்ற ராஜூ ஆகியோர் மாரியப்பனை தடுத்துள்ளனர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாரியப்பனை, மாடசாமியும், முனியசாமி என்ற ராஜுவும் சேர்ந்து மாரியப்பனின் கழுத்திலும் அடி வயிற்றிலும் மிதித்து கற்களை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விளாத்திகுளம் வைப்பாறு காட்டு பகுதியில் பதுங்கி இருந்த மாடசாமியையும் முனியசாமி என்ற ராஜீவையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். காதலித்த பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் கோவையிலிருந்து குளத்தூர் சுப்பிரமணியபுரத்துக்கு விரைந்து வந்த மாரியப்பனின் ஆசை நிராசையாக ஆகி கடைசியில் கொலையில் முடிந்திருப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Aug 2023 8:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!