/* */

கொளுத்தும் வெயிலில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

கொளுத்தும் வெயிலில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக அதிமுக சார்பில் களம் காணும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று கோவில்பட்டி நகரில் உள்ள ஜில்விலாஸ் பகுதி, ஏகேஎஸ் தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொளுத்தும் வெயிலிலும் வீடு,வீடாக சென்ற அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தான் மேற்க்கொண்ட பணிகள் மற்றும் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் திறந்த வெளி ஜீப்பில் வீதிவீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

Updated On: 1 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?